பெண்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்! தாலிபான்களின் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகளும் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.
அதன்படி பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக்கூடாது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதே போன்று தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
பாடசாலைகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கான் பெண்கள் தலீபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் மார்ச் 21-ம் திகதிக்கு பின்னர் மீண்டும் அனைத்து பாடசாலைகளிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தலீபான்கள் தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam