ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் நால்வரை கொலை செய்து சடலங்களை கிரேனில் தொங்கவிட்ட தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆட்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 பேரைக் கொலை செய்த தலிபான்கள், அவர்களின் உடலங்களை, சந்தி ஒன்றில் தொங்கவிட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள் இதனைக் கூறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
தலிபன்களுடன் இடம்பெற்ற சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும், பின்னர் அவர்களுடைய உடலங்கள் பொது வெளியில் தொங்கவிடப்பட்டதாகவும் ஹெராட்டில் உள்ள தாலிபன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ்டோஃபிட், கோல்ஹா, டார்ப்-இ-மாலிக், டார்ப்-இ-இராக் ஆகிய இடங்களில் உள்ள சாலை சந்திப்பில் இவர்களுடைய உடலங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கண்ணால் கண்ட சாட்சிகள் கூறுகின்றன.
இவர்கள் ஒரு வர்த்தகரையும் , அவரது மகனையும் கடத்தி அவர்களின் குடும்பங்களிடம் இருந்து பணம் கோரியதாக, தாலிபன் அதிகாரியை மேற்கோள் காட்டி டோலோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
