தலவாக்கலையில் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு கோர விபத்திற்குள்ளான வான்
தலவாக்கலையில் உள்ள தேவாலயத்திற்கு ஒரு குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று தேவாலயத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு சாலையில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று(19) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது
சுமார் 15 அடி கீழே
ஹட்டன்-நுவரெலியா பிரதான சாலைக்கு மேலே அமைந்துள்ள தேவாலயத்திற்கு வந்த வான், ஒரு திருப்பத்தை எடுக்க பின்னோக்கிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சுமார் 15 அடி கீழே பிரதான சாலையில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் வானின் சாரதி மற்றும் மற்றொரு நபருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், விபத்தில் வான் பலத்த சேதமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




