இன்று ஆரம்பமாகும் தலைமன்னார் - கொழும்பு தொடருந்து சேவை
தலைமன்னார் தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இண்டிபோலகே ( M.J. Indipolage) தெரிவித்துள்ளார்.
இதுவரை, மாஹோ மற்றும் அநுராதபுரம் தொடருந்து பாதைகளுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாக, தலைமன்னார் தொடருந்து பாதையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நேர அட்டவணை
அவரது அறிவிப்பின்படி, நாளை கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கி தொடருந்து பயணிக்கவுள்ளது.
இதன்படி தொடருந்து எண் 5003, கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும். மற்றும் இரவு 10:15 மணிக்கு தலைமன்னார் சென்றடையும்.
இதேநேரம் தொடருந்து இலக்கம் 5004, நாளை 13ஆம் திகதியன்று, தலைமன்னாரிலிருந்து அதிகாலை 4:15 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 10:15 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
