கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்
கொழும்பில் பெண் உட்பட ஆறு சந்தேக நபர்களை பம்பலபிட்டி பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உடல் பிடிப்பு செய்வதாக தம்பதியினால் அழைக்கப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவருக்கு உடல்பிடிப்பு செய்வதாக கூறி அழைத்து வந்து தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபாவை ஒன்லைன் மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதனையடுத்து அவரது பணப்பையில் இருந்த 15,000 ரூபாவும் பறிக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் கைது
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 54 வயதான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மேலும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri