இலங்கையில் தாய் - சியை அறிமுகப்படுத்த சீனா நடவடிக்கை
எதிர்காலத்தில் இலங்கையில் தாய் சி மற்றும் டிராகன் போர்டிங்(Tai Chi and Dragon boarding) ஆகிய விளையாட்டுக்களை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துவது தொடர்பில் சீன தரப்பு விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இலங்கைக்காக சீனத் தூதுவர், சி ஜெங்ஹாங் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையில் இன்று (12) இடம்பெற்ற சந்திப்பில் குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சீன அரசாங்கம்
இதன்போது இலங்கையில் விளையாட்டு மற்றும் இளைஞர் செயல்பாடுகளின் வளர்ச்சிக்கு சீன அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று சீனத் தூதுவர் கூறியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |