அபுதாபியில் டி10 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்
கிரிக்கெட்டின் வேகமான வடிவமான டி10 பதிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பதிப்பில் 12 நாட்கள் உற்சாகமான போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள டி10 போட்டிகளில் 8 அணிகள் 33 ஆட்டங்களில் முதல் பரிசுக்காக போட்டியிடுகின்றன. போட்டிகள் நேற்று (23.11.2022) ஆரம்பமாகியுள்ளன.

அணிகள் தொடர்பிலான தகவல்கள்
இந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அபுதாபி டி10 போட்டிகளின் 6வது பதிப்பில், டுவைன் பிராவோ, அலெக்ஸ் ஹேல்ஸ், சுரேஷ் ரெய்னா, டேவிட் மில்லர், கீரன் பொல்லார்ட் மற்றும் இயான் மோர்கன் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை வீரர்கள்
ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் காரணமாக தேசிய அணி வீரர்கள் தவிர்த்து மூன்று இலங்கை வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
சாமிக்க கருணாரத்ன, இசுரு உதான மற்றும் மதீஷ பத்திரன ஆகிய மூன்று இலங்கை வீரர்கள் தற்போது போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan