சினோபார்ம் தடுப்பூசி! அரசாங்கத்தின் திட்டம்
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இல்லாவிட்டால் சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் குப்பியை செலுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே தொற்று அதிகம் என்பதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பணிக்குழுவின் கூட்டத்தின் போது இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.