லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
வடகிழக்கு லண்டனில் (london) உள்ள ஹைனால்ட்டில் (Hainault) மர்ம நபரினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (30.04.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 36 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
துர்லோ கார்டன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் வாகனம் செலுத்தப்பட்டு, மக்கள் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனரீதியில் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam