மோதலை தீர்த்து வைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு வாள் வெட்டு
உடப்பு -கீரியன்கள்ளி - சின்ன கொலனி பிரதேசத்தில் நடந்த மோதல் ஒன்றை தீர்த்து வைக்க சென்ற உடப்பு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வாள் வெட்டு காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
உடப்பு -கீரியன்கள்ளி - சின்ன கொலனி பிரதேசத்தில் நடந்த மோதல் ஒன்றை தீர்த்து வைக்க சென்ற உடப்பு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வாள் வெட்டு காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
கீரியன்கள்ளி - சின்ன கொலனி பிரதேசத்தில் மோதல் ஒன்று நடப்பதாக நேற்றிரவு 11 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மோதலை தீர்த்து வைக்க பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சகோதரர்கள் இரண்டு பேர் இணைந்து நடத்தி வரும் கோழிப் பண்ணைக்குள் சென்ற ஒருவர், அதன் உரிமையாளர்களுடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
அங்கு நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது, மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சியில் இரண்டு பொலிஸாரும், கோழிப் பண்ணையின் உரிமையாளர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வரும் உடப்பு பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.