யாழில் தீவிரமடைந்துள்ள வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்
யாழ்.வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2 ம் திகதி மதுபோதையில் சென்ற அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தை சேர்ந்த பிரபல வாள் வெட்டு குழு, தலைவர் வெட்டுக்குமாரால் கடுமையாக தாக்கப்பட்டு, வீடுகள் உடைக்கப்பட்டு பலத்த தாக்குதலுக்கு உள்ளான ஆறு குடும்பங்கள் அன்றிரவே உயிருக்கு பயந்து தலைமறைவாகி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுன்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் குறித்த வாள்வெட்டு குழுவினரால் இரண்டு வீடுகள் பெட்ரோல் ஊற்றி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும் அங்கிருந்த சொத்துக்கள், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த வாள் வெட்டுக்குழுவின் பிரதான சந்தேகநபர் கஞ்சா கடத்தல், களவு, கசிப்பு உற்பத்தி உட்பட வீடுகளுக்குள் புகுந்து களவாடுதல், ஆட்களை மிரட்டி பணம் ,பொருள் பறித்தல் உட்பட பல்வேறு கொள்ளை சம்பவங்கள், கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான சந்தேகநபரான வெட்டுக்குமார் நேற்று முன்தினம் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது சகோதரனான ஜெயா என்றழைக்கப்படும் ஜெயராசா தலைமறைவாகியுள்ளதுடன், இச்சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸாரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டும், அவரது சகோதரன் கைது செய்யப்படாத நிலையில்,பலர் தலைமறைவாகியுள்ளமையினால் பிரதேச மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
















தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
