இலங்கை பிரதமரை சந்தித்த சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பரா ரூமி
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமிவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று(06.02.2026) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சந்திப்பு
இதன்போது, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பலதரப்பு ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்ட முற்போக்கான சர்வதேச ஒத்துழைப்புக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கள் பரிமாற்றப்பட்டதாக பரா ரூமி, அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், வழக்கமான பரிமாற்றம் மிகவும் மதிப்புமிக்கது, அதே சமயம், நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், கொள்கை ரீதியான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், அர்த்தமுள்ள அரசியல் உரையாடலை முன்னெடுப்பதற்கும் பங்களிப்பு செய்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam