ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணின் மோசமான செயல்
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணொருவர் விலையுயர்ந்த புகைப்படம் ஒன்றை கொள்ளையிட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, உனவட்டுன பகுதியிலுள்ள ற்றுலா பயணிகளுக்கான கடையில் புகைப்படத்தை திருடிய குற்றச்சாட்டில் 52 வயதுடைய சுவீடன் நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
15,500 மதிப்புள்ள புகைப்படத்தை திருடியதற்காக சந்தேக நபர் மீது முறைப்பாடு செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்ஸ்டீன் கோப்புக்களில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருடன் புகைப்படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி
புகைப்படம் கொள்ளை
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், புகைப்படம் மீள பெறப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் கடைக்குச் சென்ற வெளிநாட்டுப் பெண், விலையுயர்ந்த புகைப்படத்தை திருடியுள்ளார்.
அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam