உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விதித்த அதிரடி உத்தரவு
இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் தடையொன்றை விதித்துள்ளார்.
அதன்படி மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு உத்தவிடப்பட்டுள்ளது.
விலங்குகள் உயிரிழப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் பல உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
