யாழில் கடும் குளிரால் உயிரிழக்கும் கால்நடைகள் (Photos)
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயிரிழந்துள்ளன.
நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர் காரணமாக வட மாகாணத்தில் 300இற்கும் மேற்பட்ட மாடுகளும், 180இற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும்
அதேவேளை யாழ். மாவட்டத்தில் 80இற்கும் மேற்பட்ட ஆடுகளும், 20 தொடக்கம் 30இற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.
மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும், அத்துடன் இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் கூடலாம் என்றும் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
you may like this video...





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
