காவல்துறை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்
காவல்துறை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு - கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் காவல்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படவிருந்தனர்.
எனினும், நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமை காரணமாக இடமாற்ற உத்தரவுகள் இடைநிறுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இடமாற்ற உத்தரவுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதியின் பின்னர் அமுலாகும் என அறிவித்துள்ளார்.
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இடமாற்ற உத்தரவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri