ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
அம்பாறை - கொனாகொல்ல சந்தியில் நீர் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தரொருவரை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாறை - வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தக் பொலிஸ் உத்தியோகத்தர், கடந்த மார்ச் 26ஆம் திகதி விடுமுறை பெற்றுச்சென்று, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சிவில் உடையில் பங்கேற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேவையிலிருந்து இடைநிறுத்தம்
இந்தநிலையில், நேற்று (05.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய சக்திவாய்ந்த லேசர் ஆயுதம் - கண் இமைக்கும் நேரத்தில் ட்ரோன்களை வீழ்த்தும் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
