காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு சந்தேகநபர்கள் கைது
ஐஸ் போதைப்பொருட்களுடன் ஏழு சந்தேகநபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய கற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.நந்தன தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் கைதான இடங்கள்
காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை, பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வைத்து போதைப்பொருட்களுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே ஐஸ் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2520 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலியில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







