உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கைதானவர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த (44) வயதுடையவர் என தெரியவருகிறது.
மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேகநபர் தங்கியிருந்த தற்காலிக கூடாரத்தினை சோதனையிட்டபோது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
மஸ்கெலிய பொலிஸார்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




