யாழில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!
யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(19) யாழ்ப்பாணம் - குருநகர் 5மாடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது,சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



