விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் பிரச்சாரங்களை மேற்கொண்ட நபர் கைது
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பான அறிவிக்கப்பட்டுள்ள நிலைமையில், இந்த சந்தேகநபர் இணையத்தளம் ஊடாக அந்த அமைப்பு தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏறாவூர் - செங்கலடி பிரதேசத்தில் வசித்து வந்த 56 வயதான விக்டர் மோகன் என்ற நவநீதன் பிள்ளை மோகன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து கையடக்க தொலைபேசி, எபல் ஐ பேட் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் சுமார் 14 வழக்குகள் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.