சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்கு புதிய தலைவர்
சென்னை(Csk) அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைவராக சூர்யகுமார் யாதவ்(Suryakumar yadav) செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஐபிஎல்-2025
கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் 10 அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு செம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூர் ரோயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கின்றது.
இந்தவகையில், சென்னை அணி 23ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது.
சூர்யகுமார் யாதவ்
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிதலைவராக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை அணி தலைவர் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் சூர்யகுமார் யாதவ் அணி தலைவராக செயல்படவுள்ளார்.
கடந்த ஆண்டு மும்பை அணி விளையாடி கடைசி போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் News Lankasri