கோட்டாபய அரசின் புதிய அரசமைப்பு தொடர்பில் சுரேஷ் சந்தேகம்!

Srilanka Suresh Premachandran Gotapaya
By Rakesh Dec 02, 2021 09:10 PM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு கொண்டுவரவுள்ள புதிய அரசமைப்பு தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும்,முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சில சந்தேகங்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது,

"புதிய அரசமைப்பு எதற்கு என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்து இருக்கின்றது. புதிய அரசமைப்பு என்ன புதிய விடயங்களைக் கொண்டு வரப்போகின்றது என்ற கேள்வியும் எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.

ஏற்கனவே இருக்கின்ற அரசமைப்பில் 20ஆவது திருத்தச் சட்டம் என்பது ஜனாதிபதிக்கு மேலதிகமான அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. ஆகவே, ஜனாதிபதி தனக்கான அதிகாரங்களை ஏற்கனவே கையில் எடுத்துள்ளார்.

தேர்தல் முறைமை தொடர்பில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களை விகிதாசார முறைமையிலா அல்லது கலப்பு முறைமையிலா நடத்துவது என்ற கேள்வி இருக்கின்றது.

இந்தத் தேர்தல் தொடர்பான மாற்றத்தை தற்போதைய அரசமைப்பின் இன்னொரு திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்டு அது முடிவுக்குக் கொடுவரப்படலாம். ஆனால், இதற்கு மாறாக புதிய அரசமைப்பு பற்றி இப்போது பேசப்படுகின்றது.

இந்தப் புதிய அரசமைப்பின் ஊடாக இது ஒரு பௌத்த நாடாக அல்லது இது ஒரு பௌத்த அரசியல் சாசனமாக மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படலாம். ஏனெனில் புதிய அரசமைப்பின் வரைவு இதுவரை நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ முன்வைக்கப்படவில்லை.அந்த வரைவைப் பார்ப்பதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் யாருக்கும் கிடைக்கவில்லை.

சிங்கள - பௌத்த வாக்குகளால் தான் இந்த ஆட்சியை அமைத்துள்ளதாக ஜனாதிபதி தலைமையிலான அரச தரப்பினர் கூறுகின்றனர். சிங்கள மக்கள் தான் தமக்கு முழுமையாக வாக்களித்துள்ளனர் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் சாசனம் என்பது தமிழ் மக்களுடைய அல்லது ஏனைய சிறுபான்மை இனங்களுடைய அபிலாஷைகளை உள்ளடக்கி இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமே தேவை இல்லை என்று கூறக்கூடிய அரசுதான் இப்போது இருக்கின்ற அரசு. 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை, இலங்கைத் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று கிடையாது, சில பொருளாதாரப் பிரச்சினைகள் மாத்திரம்தான் இருக்கின்றன.

அவற்றைத் தீர்த்துவிட்டால் போதும் என்று சொல்லக்கூடியவர்தான் இப்போது இருக்கின்ற ஜனாதிபதி. இலங்கையின் இப்போதைய ஜனாதிபதியையும், அரச தரப்பினரையும் பொறுத்த வரைக்கும் இது சிங்கள - பௌத்த நாடாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

முழு இலங்கையும் சிங்கள - பௌத்த மேலாதிக்கத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர்.

எனவே, வரப்போகின்ற புதிய அரசமைப்பு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் செய்கின்ற அரசியல் சாசனமா அல்லது 13ஆவது திருத்தத்தில் உள்ளவற்றில் சிலவற்றை எடுத்து விடுவதற்கான அரசியல் சாசனமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை அதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தும் கைங்கரியங்களில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

இப்படிப் பல விடயங்களைச் செய்த பின்னர் எலும்பும் தோலுமான எதுவுமற்ற ஒரு மாகாண சபை புதிய அரசமைப்பில் வரலாம். உள்ளவற்றை நாம் இழந்துபோகக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்"  என்றார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US