சுரேஷ் சாலே நடத்திய ரகசிய சந்திப்பு! தொலைபேசி மூலம் இணைந்த ரணில் - எழுந்துள்ள புதிய சர்ச்சை
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தொடர்பான சில ஆதாரங்கள் அல் ஜசீரா வெளியிட்ட காணொளி அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.
ரகசிய சந்திப்பு
ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்த இரண்டு விசாரணைக் குழுக்கள், சுரேஷ் சாலே மற்றும் மூத்த டிஐஜி நிலந்த ஜெயவர்தன ஆகியோர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சுரேஷ் சாலே மற்றும் பிள்ளையானின் முன்னாள் ஊடக செயலாளர் அசாத் மௌலானா ஆகியோர் புத்தளத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் ரகசியமாக சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த சந்திப்பில், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவிற்கு தாக்குதலை மேற்கொள்ள தேவையான பின்னணி ஆதரவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜமீல் என்பவருடன் சாலே நீண்டகாலமாக தொடர்பில் இருந்ததாக தொலைபேசி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க
மேலும், தாக்குதலுக்கு முன்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து வெளியேறிய ஜமீலுக்கு, தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுரேஷ் சாலே தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும் சட்டமா அதிபர் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு, இந்த விசாரணை அறிக்கைகளை அழிக்கும்படி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிக்கைகள் காணாமல் போவதற்கு முன்பு, கொழும்பில் உள்ள சாகல ரத்நாயக்கவின் இல்லத்தில் சுரேஷ் சாலே மற்றும் நிலந்த ஜெயவர்தன ஆகியோருடன் ரகசிய கலந்துரையாடல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன அறிக்கைகளில் சேனல் 4 வெளியீடு தொடர்பான விசாரணை அறிக்கையும், முன்னாள் நீதிபதி அல்விஸ் தலைமையிலான குழு அறிக்கையும் அடங்கும் என கூறப்படுகிறது.
புதிய சர்ச்சை
தற்போது, கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட பல தரப்புகள், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்த அறிக்கைகளை வெளியிடுமாறு வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில், கொழும்பில் உள்ள ஒரு உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய ஆவணம் ஒன்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், சுரேஷ் சாலே தலைமையில் தேசிய புலனாய்வு துறையிலிருந்து 85 பேர் ரகசியமாக சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பட்டியலில் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், யூடியூபர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளிலிருந்து தங்களை பாதுகாக்கவும், சமூக கருத்தை மாற்றவும் பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
மேலும், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் சுரேஷ் சாலே இடையிலான தொடர்பு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலிருந்தே இருந்ததாக வெளிநாட்டு உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடி பகுதியில் சந்திப்பு நடைபெற்றதாகவும், பின்னர் மலேசியாவில் முக்கிய கலந்துரையாடல்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம் பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் தரிந்து ஜெயவர்தனவை குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரை கைது செய்ய சதி முயற்சி நடைபெறுகிறது என அவர் பதில் ஐஜிபியிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam