இந்து சமுத்திர பிராந்தியத்தை வல்லாதிக்க அதிகார போட்டிக்கான களமாக்க வேண்டாம் - அரசுக்கு சுரேஷ் எச்சரிக்கை

Sri Lanka China India
By Rakesh Aug 05, 2022 07:20 PM GMT
Report

இந்து சமுத்திரப் பிராந்தியம் எப்போதும் அமைதி பூங்காவாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது.

எனவே, அந்த அமைதி முயற்சியைக் குலைக்கும் விதத்தில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அமைந்துவிடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீன உளவுக் கப்பலின் வருகை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரவிருப்பதாகவும், ஏறத்தாழ ஒருவாரம் இங்கு தங்கியிருந்து ஆய்வுகள் செய்ய இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் உளவுத்துறை கப்பலின் வருகை 

இந்த உளவுக் கப்பலானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிப்பதுடன், செய்மதிகள் அனுப்புவது போன்றவற்றைக் கண்காணிக்கும் திறன் கொண்டதுமாகும்.

மேலும், இந்தக் கப்பலைச் சுற்றி 750 சதுர கிமீ பரப்பளவிற்கு சகலவற்றையும் கண்காணிக்கும் தொழில்நுட்பத் திறன்களையும் கொண்டது. இலங்கை என்பது இந்தியாவுக்கு மிக அண்மித்த நாடாக இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு எல்லைப் பரப்புக்குள் இலங்கையும் உள்ளடங்குகின்றது.

இந்தியாவின் தென் மாநிலங்களில் அணுசக்தி நிறுவனங்களும், செய்மதி ஏவுதளங்களும் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களும் உள்ளன.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், சீன உளவுக் கப்பலின் வருகை என்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்பதற்கு அப்பால் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

அணிசேரா நாடுகளின் கூட்டு

இது ஒருபுறமிருக்க. இந்து சமுத்திரப் பிராந்தியமானது வல்லரசுகளின் போட்டியிலிருந்து விடுபட்டு, ஓர் அமைதிப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்பதில் நேருவும், சாஸ்திரியும் இந்திராகாந்தியும் சிரத்தையுடன் இருந்தார்கள். அதன் காரணமாகவே அவர்கள் அமெரிக்க சோவியத் வல்லரசுகளுடன் இணையாமல் அணிசேரா நாடுகளின் கூட்டு ஒன்றை உருவாக்கினார்கள்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமரான நேரு, அணிசேரா நாடுகளின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவராக இருந்து அணிசேரா நாடுகளின் அணியை உருவாக்கினார்.

தற்போது, இந்து சமுத்திரப் பிராந்தியமானது அவ்வாறான அமைதிப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து அமெரிக்க சீன வல்லரசுகளின் வல்லாதிக்கப் போட்டியின் களமாக மாறுகின்றதா என்ற அச்சம் எழுகின்றது.

2016ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வருகை தந்தபோது இந்தியா தனது கவலையைத் தெரிவித்திருந்தது. அன்று இலங்கை அரசு இந்தியாவின் கவலைக்குரிய விதத்தில் பதிலளிக்கவில்லை. இப்போதும் சீனா தனது உளவு கப்பலை இலங்கைக்குள் நங்கூரமிடத் திட்டமிட்டுள்ளது.

இதற்கும் இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு அந்தக் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காகவே வருகை தருவதாகக் கூறுகின்றது.

இந்து சமுத்திரத்தின் அமைதியின்மை

இலங்கையின் இத்தகைய அணுகுமுறைகளைப் பார்க்கின்றபோது இந்து சமுத்திரத்தின் அமைதியின்மைக்கு இலங்கையும் துணைபோகின்றதோ என்ற கேள்வி பலமாக எழுகின்றது.

இலங்கையில் ஏற்படும் இனமுரண்பாடுகள் மற்றும் இலங்கை ஏனைய வல்லாதிக்க சக்திகளின் பிடிக்கு உட்படுவது என்பது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதில் இந்தியா எப்போதும் கரிசணை கொண்டு செயற்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே, இலங்கையில் இனமுரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் இலங்கை ஏனைய வல்லாதிக்க சக்திகளின் ஆளுமைக்குள் செல்லக்கூடாது என்பதிலும் இந்தியா கரிசணையுடன் செயற்பட்டு வந்திருக்கின்றது.

ஆனால், அண்மைக்கால இலங்கை அரசின் நடவடிக்கைகளானது இந்தியாவின் இந்த முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சுகின்றோம்.

இலங்கையின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதையும் நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

எனவே, இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் காத்திரமான மாற்றங்கள் தேவை எனவும், இந்து சமுத்திரப் பிராந்தியம் அமைதிப் பிராந்தியமாகத் திகழ வேண்டும் என்பதற்கு முதன்மை ஸ்தானம் கொடுக்க வேண்டும் என்பதிலும் இலங்கை கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோருகின்றது என்றுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு

27 Dec, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

21 Dec, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
நன்றி நவிலல்

கரணவாய் மேற்கு, அச்சுவேலி, Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கிளிநொச்சி, கொழும்பு

26 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US