மகிந்த மகனின் செயற்கைக்கோள் சர்ச்சை.. சுப்ரீம்செட் வெளியிட்ட அறிக்கை
தங்களது செயற்கைக்கோள் 87.5° கிழக்கு சுற்றுப்பாதையில் உள்ளது என்பதை சுப்ரீம்செட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.எம்.மணிவண்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
செய்மதி
குறித்த செய்மதி ஏவப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பில் எந்தவொரு அரசாங்க நிதியுதவியும் இல்லாமல் தங்களது செய்மதி வெற்றிகரமாக ஏவப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரீம்செட் அதன் நிதி குறித்து நடந்து வரும் விவாதங்களை, தவறாக வழிநடத்தும் மற்றும் ஆதாரமற்றவை என்றும் விமர்சித்துள்ளார்.
தங்களது நிறுவனம் கடுமையான சர்வதேச தரநிலைகளின் கீழ் செயல்படுவதாகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்முறையுடன் திட்டங்களை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்க நிதியுதவியுடன் ஏவப்பட்ட செய்மதி காணாமல் போயுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா



