ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர்தலைவரின் மரணத்திற்கு தம்பலகாமத்தில் கண்டனம்
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர்தலைவரும் புரட்சித் தலைவருமான அலிகமெனியின் மறைவு தொடர்பான செய்தி மிகுந்த துயரத்துடன் அறியப்படுவதுடன் இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும் என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஈரான் நாட்டின் அரசியல் மற்றும் மத வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய தலைவராக அவர் விளங்கினார்.
ஆட்சிமுறையில் மாற்றங்கள்
அவரது வழிகாட்டுதலும் கொள்கைகளும் ஈரான் நாட்டின் ஆட்சிமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியதாக வரலாறு எமக்கு பாடமாக இருக்கிறது.

அவரது மறைவால் துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கும், ஈரான் நாட்டின் அரசாங்கத்தினருக்கும் மக்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த நாசகார வேலைகள் மூலம் நாட்டில் குழப்பங்கள் ஏற்படுத்தும் இஸ்ரேல் நாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளை, உலக நாடுகள் அனைத்திலும் அமைதி, மனிதநேயம் மற்றும் பரஸ்பர மரியாதை நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri