ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர்தலைவரின் மரணத்திற்கு தம்பலகாமத்தில் கண்டனம்
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர்தலைவரும் புரட்சித் தலைவருமான அலிகமெனியின் மறைவு தொடர்பான செய்தி மிகுந்த துயரத்துடன் அறியப்படுவதுடன் இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும் என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஈரான் நாட்டின் அரசியல் மற்றும் மத வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய தலைவராக அவர் விளங்கினார்.
ஆட்சிமுறையில் மாற்றங்கள்
அவரது வழிகாட்டுதலும் கொள்கைகளும் ஈரான் நாட்டின் ஆட்சிமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியதாக வரலாறு எமக்கு பாடமாக இருக்கிறது.

அவரது மறைவால் துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கும், ஈரான் நாட்டின் அரசாங்கத்தினருக்கும் மக்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த நாசகார வேலைகள் மூலம் நாட்டில் குழப்பங்கள் ஏற்படுத்தும் இஸ்ரேல் நாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளை, உலக நாடுகள் அனைத்திலும் அமைதி, மனிதநேயம் மற்றும் பரஸ்பர மரியாதை நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri