21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு வாசுதேவ நாணயக்காரவும் ஆதரவு
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு முழுமையாக ஆதரவளிக்கப்படும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும், பதவிகள் வகிப்பதையும் தடுக்கும் ஏற்பாடு கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புதிய பிரதமரைத் தெரிவு செய்த அணுகுமுறையைத் தமது கட்சி அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதனால்தான் அரசாங்கத்தில் இணையவில்லை எனவும் ஊடகங்களிடம்
வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.