இன்று 14 வீதம் பெரிதாகவும் பிரகாசமாகவும் தென்படவுள்ள முழு நிலவு
இன்றைய பூரணை தினத்தின் முழு நிலவு சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகியவற்றின் அசாதாரண கலவையாக இருக்கும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நிலவு அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது நிகழும் முழு நிலவின் விளைவாக, சந்திரன் 14 வீதம் பெரியதாகவும், கடந்த காலத்தில் பார்த்த சில முழு நிலவுகளை விட 30 வீதம் பிரகாசமாகவும் தென்படும் என்று பேராசிரியர் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ப்ளூ மூன்
பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது சந்திரன் முழுமையாக தென்பட்டால், அது சூப்பர் ப்ளூ மூன் அல்லது சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை (24.08.2023) காலை 7.05 மணிக்கு, சந்திரன் பூமிக்கு மிக அருகில் அதாவது 357,344 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும்.
ஒரே மாதத்தில் இரண்டு பூரணை நிலவுகள் வரும் போது, இரண்டாவது முழு நிலவு, நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது.
எனினும் இது ஒரு பெயர் மாத்திரமே என்றும், சந்திரன் உண்மையில் நீல நிறத்தில் தென்படாது என்றும் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
முழு நிலவை காண முடியும்
கிழக்கு வானத்தில் சூரியன் மறைந்த பிறகு இன்று 30ஆம் திகதி மாலை வேளையில் இருந்து முழு நிலவைக் காண முடியும் எனினும் இந்த நிலவைக் காண சிறந்த நேரம் நாளை 31ஆம் திகதி சூரிய உதயத்திற்கு முன்னர் உள்ள காலப்பகுதியாகும்.

இந்த வாய்ப்பை ஒருவர் தவறவிட்டால், அடுத்த சூப்பர் ப்ளூ நிலவுகளுக்காக 2037 ஜனவரி மற்றும் மார்ச் மாத் வரை காத்திருக்க வேண்டும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri