பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு விவகாரம்: விமர்சனத்திற்கு சுந்தரலிங்கம் பிரதீப் பதிலடி
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேசுவதற்கு மலையக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியது சில அரசியல் தலைமைகளுக்குப் பிடிக்கவில்லை. நாட்டில் ஊழல், மோசடி நடைபெறும்போது மௌனமாக இருந்தவர்கள், இப்போது ஏன் கேள்வி எழுப்புகிறார்கள் என்பது தெரியவில்லை.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் போதே பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தது. இதன்படி, தற்போது 400 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் சம்பள உயர்வு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோன்று, தற்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதுவும் விரைவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri