கோவிட் வைரஸ் தாக்கத்தால் கடும் நெருக்கடிக்குள் மேல் மாகாணம்
இலங்கையில் கோவிட் வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் 60 ஆயிரத்து 470 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 44 ஆயிரத்து 565 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 22 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், நேற்று (22) மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 322 பேருக்கும்,
கம்பஹா மாவட்டத்தில் 364 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 292 பேருக்கும்
கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.