மனோ கணேசனுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் அழைப்பாணை!
கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சார்பாக தமிழ் மொழியில் மனோ கணேசனுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை இம்மாதம் 29ம் திகதி விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி தமிழ் மொழியில் அழைப்பாணையை மனோ கணேசன் இல்லத்துக்கு வலய பொலிஸ் நிலையம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி, கடந்த வாரம் தனி சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை மனோ கணேசனுக்கு அனுப்பட்ட போது, அதை ஏற்க மறுத்து தமிழ் மொழியில் அழைப்பாணையை அனுப்பும்படி மனோகணேசன் கூறி இருந்தார்.
இந்நிலையிலே மீண்டும் தமிழ் மொழியில் இவ் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மனோ கணேசனுக்கு அழைப்பாணை: சிங்கள ஆணையை ஏற்க மறுப்பு