நீதிமன்றில் முன்னிலையான வேலன் சுவாமிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு (Video)
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த வேலன் சுவாமிகள் மற்றும் சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னை நாள் தவிசாளர் ஆகியோர் சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளை உத்தரவிட்டுள்ளது.
மேலதிக செய்தி : யது
முதலாவது இணைப்பு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் (07.08.2023) காலை 9 மணிக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அழைப்பாணை
சட்டமுறையற்ற போராட்டம் நடைபெற்றுள்ளது என தெரிவித்தே குறித்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னை நாள் தவிசாளர் ஆகியோரை இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
