பயணத்தடை சட்ட ரீதியற்றது - மீறுபவர்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை: சுமந்திரன்
கோவிட் - 19இன் மூன்றாவது அலை வந்திருக்கின்ற இந்த சூழ்நிலையில் அரசாங்கம் பல விடயங்களை செய்யத் தவறியிருக்கிறதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
செய்கிற பல விடயங்களை அரசாங்கம் சரியான முறையில் நீதியான முறையில் செய்யாமலிருக்கிறது. இதனை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது.
நாடு முழுவதும் பயணத்தடை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தடை அல்லது நாடு முடக்கப்படுவது என்பது சட்ட ரீதியாக செய்யப்படவில்லை.
இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுவதால் மக்கள் தற்போது கைது செய்யப்படுவதாக எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் சட்டத்திலே அதற்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
