புஸ்வானமாய் போன கதவடைப்பால் மூக்குடைந்த சுமந்திரன்! எச்சரித்த ஆளும் தரப்பு
வடக்கு - கிழக்கு மக்கள் இனவாத அரசியல் செய்பவர்களுக்கு சரியான பாதையை காட்டியுள்ளதோடு, பாடத்தையும் கற்பித்துள்ளனர் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று, தமிழரசுக்கட்சியால் வடக்கு - கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கதவடைப்பு போாட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு - கிழக்கு மக்கள்
இவர்களை கொஞ்சம் அமைதியாக இருக்க கூறுங்கள். இவர்களால் அதிக பிரச்சினையாக உள்ளது.
நேற்றைய கதவடைப்பின் மூலம் வடக்கு - கிழக்கு மக்கள் இனவாத அரசியல் செய்பவர்களுக்கு சரியான பாதையை காட்டியுள்ளதோடு, பாடத்தையும் கற்பித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் இனவாத்ததை எதிர்த்தே வாக்களித்தனர்.
இதன்படி கதவடைப்பு என கூறி பல்வேறு நடவடிக்கையில் இவர்கள் குதித்திருந்தனர். வெடிக்கும் என நினைத்து இவர்கள் கொண்டுவந்த கதவடைப்பு போராட்டம், புஸ்வெடியாய் போயுள்ளது.
சுமந்திரனை நீண்டகாலமாக பார்த்து வருகின்றேன். நடுநிலையாக இருப்பதாக கூறி இனவாதத்தை துண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.
சரியான பாடம்
அவரை நினைக்க பாவமாக இருக்கிறது. அவருக்கு நேற்றையதினம் வடக்கு கிழக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர்.
நடுநிலையாக செயற்படும் ஒரு அரசியல் வாதி என கூறும் சுதந்திரனை, பாழடைந்த இனவாதத்தை தனது அரசியல் இருப்புக்காக பயன்படுத்தி மூக்குடைந்து போனார்.
இன்று இந்த நாட்டை நாசப்படுத்தியவர்கள் வெள்ளை ஆடையை அணிந்துக்கொண்டு நல்லவர்களை போல கதைக்கின்றனர்.
தெற்கிலும் வடக்கிலும் இனவாத்தை தூண்டி அரசியல் செய்பவர்களுக்கு இது சரியான பாடம். இதற்கு இனியும் இடமில்லை என்பதை புறிந்துக்கொள்ளுங்கள்" என்றார்.



