அரச வங்கியில் கொள்ளையிடப்பட்ட அம்பிட்டிய தேரரின் பணம்! கத்தி கூச்சலிட்ட தேரர்
அரசாங்க வங்கிகளில் மக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாக அம்பிட்டியே சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தம் வங்கியில் வாய்ப்புச் செய்த பணம் களவாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய அரச வங்கிகளில் அப்பாவி பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பணம் கொள்ளை
இவ்வாறு பணம் கொள்ளை இடப்படுவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மக்கள் வங்கியை கிளைக்குள் அவர் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
வங்கிகளின் பிரதானிகள், வைப்பிலிட்ட பணம் களவாடப்படும் நடவடிக்கைகளை தடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது வங்கியில் தனது வங்கி கணக்கில் வைப்புச் செய்த பணம் எவ்வாறு வேறு ஒரு வங்கியின் வைப்பாளரது கணக்கில் வைப்பிலிடப்பட்டது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
காணொளி
இந்த பிரச்சனைக்கு நாட்டின் மத்திய வங்கிய ஆளுநரும் நிதி அமைச்சரும் பொறுப்பு சொல்ல வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பணத்தை வழங்கினால் எந்த விதமான பிரச்சினையும் இன்றி தாங்கள் வங்கியை விட்டு செல்ல தயார் என சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார்.
வங்கியில் இருக்கும் அதிகாரிகள் எவரும் தனது பணம் தொலைந்த விவகாரம் தொடர்பில் அல்லது வங்கியில் இருந்து காணாமல் போன விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடுந்தொனியில் திட்டி அவர்களை அச்சுறுத்தி அவர்களை தாக்குவதற்கு அம்பிட்டிய சுமனரதன தேரர் முயற்சித்த காணொளி வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

எப்படி அரேஞ்ச் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டீங்க.. மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் Cineulagam
