ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர் தற்கொலை
கிளிநொச்சி - பாரதிபுரம் கிராமத்தில் 37 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை போன்று நேற்றிரவு கடமை முடிந்து வீடு திரும்பி இரவு உணவை முடித்துவிட்டு நித்திரைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அதிகாலை தாயார் சென்று பார்த்த போதே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
37 வயதான அவர் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்த இவர் மனைவியை பிரிந்து வயோதிப தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.