காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! அமெரிக்க இராணுவத்தினரின் செயல்
காபூல் விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட குழுவை இலக்கு வைத்து நங்கஹார் மாகாணத்தில் ஆளில்லா விமான தாக்குதலை அமெரிக்க இராணுவம் நடத்தியது.
இந்த தாக்குதலில் தாக்குதல் நடத்த திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட முக்கிய நபர் கொல்லப்பட்டதாக தாம் நம்புவதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே வியாழக்கிழமை நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர், 2 பிரிட்டன் நாட்டவர் மற்றும் பிரிட்டன் நாட்டவரின் குழந்தை ஒன்று உள்பட சுமார் 170 பேர் கொல்லப்பட்டனர்.
நாட்டை விட்டு வெளியேற விரும்பி விமானநிலைய நுழைவாயிலில் காத்திருந்த ஆப்கானியர்களும் இதில் அடக்கம்.
இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐஎஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஐஎஸ்-கே அறிவித்தது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களை தாங்கி வருகின்றது இந்த காணொளி,

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் News Lankasri
