சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சீனியின் விலை மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விலை அதிகரிப்பு
தாய்லாந்திலிருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் விலைகள் மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடுகின்றனர்.
சீனியின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாவினால் உயர்வடையும் என எதிர்வு கூறியுள்ளனர்.

தற்பொழுது நாட்டில் ஒரு கிலோகிராம் சீனி 265 ரூபா முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
சீனி உள்ளிட்ட சில பொருட்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதனை இந்தியா இடைநிறுத்திக் கொண்டதனால் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட ஏற்றுமதி
உக்ரைன் போர் உள்ளிட்ட சில காரணிகளினால் இந்தியா சீனி, கோதுமை தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டுள்ளது.

எவ்வாறெனினும், மாலைதீவு, பங்களாதேஷ், மியன்மார் உள்ளிட்ட சில நாடுகள் ராஜதந்திர ரீதியில் அணுகி இந்தியாவிடம் சீனி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன.
இதேவிதமாக இலங்கையும் இந்தியாவிலிருந்து சீனியை இறக்குமதி செய்து கொள்ள ராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan