சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சீனியின் விலை மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விலை அதிகரிப்பு
தாய்லாந்திலிருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் விலைகள் மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடுகின்றனர்.
சீனியின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாவினால் உயர்வடையும் என எதிர்வு கூறியுள்ளனர்.

தற்பொழுது நாட்டில் ஒரு கிலோகிராம் சீனி 265 ரூபா முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
சீனி உள்ளிட்ட சில பொருட்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதனை இந்தியா இடைநிறுத்திக் கொண்டதனால் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட ஏற்றுமதி
உக்ரைன் போர் உள்ளிட்ட சில காரணிகளினால் இந்தியா சீனி, கோதுமை தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டுள்ளது.

எவ்வாறெனினும், மாலைதீவு, பங்களாதேஷ், மியன்மார் உள்ளிட்ட சில நாடுகள் ராஜதந்திர ரீதியில் அணுகி இந்தியாவிடம் சீனி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன.
இதேவிதமாக இலங்கையும் இந்தியாவிலிருந்து சீனியை இறக்குமதி செய்து கொள்ள ராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri