திடீரென மாணவிக்கு ஏற்பட்ட சுகயீனம் - ஒரு மணித்தியாலத்தில் மரணம்
அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் திடீர் சுகயீனமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்து ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அம்பலங்கொட, தர்மாஷோக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நெஞ்சு வலி மற்றும் மூச்சு விட சிரமம் காரணமாக நேற்று அதிகாலை 12.05 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 1.05 மணியளவில் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவி தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri