யாழ்.சாவகச்சோி நகர வர்த்தகருக்கு திடீர் சுகயீனம்: குடும்பத்தில் நால்வருக்கு கோவிட் உறுதி
யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் அவர் உட்பட குடும்பத்தில் நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தகருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாவகச்சோி மருத்துவமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவர் உட்பட குடும்பத்தினர் நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri