யாழ்.சாவகச்சோி நகர வர்த்தகருக்கு திடீர் சுகயீனம்: குடும்பத்தில் நால்வருக்கு கோவிட் உறுதி
யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் அவர் உட்பட குடும்பத்தில் நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தகருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாவகச்சோி மருத்துவமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவர் உட்பட குடும்பத்தினர் நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam