தென்னிலங்கையில் திடீரென உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய மீன்கள்
மாத்தறை, பொல்ஹேன கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உயிரிழந்த நிலையில் பாரியளவிலான மீன்கள் கரையொதுங்கி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச மக்களினால் நாரா நிறுவனத்திடம் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு இறந்த இரண்டு திமிங்கலங்களின் உடல்களும் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கமைய, நாரா நிறுவனத்தின் மூத்த நிபுணர் உபுல் லியனகேவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை அதிகாரிகள் குழு ஒன்று அந்தப் பகுதிக்கு வந்திருந்தது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை விசாரணைகளின் பின்னரே கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri