யாழில் கோவிட் சடல மின் தகன கட்டணத்தில் திடீர் மாற்றம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்று (28) மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது .
இதன்போது எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மின் தகன கட்டணத்தில் மாற்றம் செய்வதற்கு சபை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி 12 வயதுக்குக் குறைந்த கொரோனாத் தொற்றாளர்களின் சடலங்களுக்கு 4 ஆயிரம் ரூபாவும், ஏனைய கொரோனாத் தொற்றாளர்களின் சடலங்களுக்கு 8 ஆயிரம் ரூபாவும் தகனம் செய்வதற்கு அறவிடப்படவுள்ளது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொரோனாத் தொற்று அல்லாத சடலங்களுக்கு 15 ஆயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri