சூடானில் இராணுவப் புரட்சி - பிரதமர் மற்றும் ஏனைய தலைவர்கள் கைது
சூடானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் ஏனைய தலைவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவப்புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இராணுவத்தினரால் பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கும் (Abdallah Hamdok) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சர்வதேச செய்திகள் தொிவிக்கின்றன.
எனினும் இந்த புரட்சி தொடர்பில் சூடான் இராணுவம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என தெரியவருகிறது.
சூடானில் நீண்ட கால ஆட்சியாளராக இருந்த ஒமர் அல்-பஷீர் (Omar al-Bashir) இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
அன்றில் இருந்து இராணுவத்துக்கும், அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன.
இந்தநிலையில் இன்று அங்கு இராணுவப்புரட்சி இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரபு லீக் ஆகியவை தமது கவலையை வெளியிட்டுள்ளன.
இராணுவப்புரட்சியை அடுத்து தலைநகரான
கார்டூமில் இணையச்சேவைகள் செயலிழந்துள்ளதாக தெரியவருகம் நிலையில் மக்கள் தெருக்களில் டயர்களை எரிப்பதை காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில்
வெளியாகியுள்ளன.
