தொடரும் பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழு சூடானில்! 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் தலைநகர் கார்ட்டூம் பகுதியில் அந்நாட்டின் இராணுவத்தினருக்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே கடந்த ஏப்ரல் 15மே் திகதி மோதல் தொடங்கியது.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு
இதில் 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுவதுடன், 2,600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் நீடித்த மற்றும் கணிக்க முடியாத உள்நாட்டுப் போரின் அச்சத்தை எழுப்பியுள்ளது இந்த மோதல்.
இம்மோதல் வெளிநாட்டு ஆயுதக் குழுக்கள் மற்றும் பிராந்திய சக்திகளை ஈர்க்கக்கூடும் என்றும், வடகிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு மட்டுமின்றி, ஏற்கனவே ஸ்திரமற்ற பிராந்தியத்திற்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சண்டை பரவுகிறது
"இப்போர் ஒரு நீடித்த போராக மாறக்கூடும் எனவும், இது நாட்டின் அமைதியான சுற்றளவில் உள்ள அதன் அண்டை நாடுகளுக்குள் பரவும் அபாயம் உள்ளது" என்று சர்வதேச நெருக்கடி குழு கூறுகிறது.
"சூடானியர்களை பயமுறுத்தும் முழு உள்நாட்டுப் போரை நோக்கி நாட்டைத் தள்ளியுள்ளன." எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"சவால் என்னவென்றால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் - சாட், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தெற்கு சூடான் மற்றும் எத்தியோப்பியாவின் எல்லையில் இந்த மோதல் பரவியுள்ளது," என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகதிகள்
10,000 முதல் 20,000 வரையிலான மக்கள் சூடானின் மேற்கு அண்டை நாடான சாட் வரை சண்டையிலிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
கிழக்கு சாட் ஏற்கனவே 400,000 சூடான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது.
சூடான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும், பெப்ரவரியில் ஐ.நா. அதன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வளர்ந்து வரும் பசி நெருக்கடியை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுப் போர்
மோதல் நீடித்தால், மிகவும் துண்டு துண்டான சூடான் சமூகத்தில் அதிகமான மக்கள் ஆயுதம் ஏந்தக்கூடும் என்று ஆய்வாளர் அலெக்ஸ் டி வால் கூறுகிறார். “இரண்டு கதாநாயகர்கள் இருக்கிறார்கள். மோதல் தொடர்ந்தால், நிலைமை விரைவில் சிக்கலானதாக மாறும். என்று எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
பிராந்திய அதிகாரங்கள்
பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வன்முறையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளன.
ஆனால் வல்லுநர்கள் எகிப்து அல்-புர்ஹானை ஆதரிக்கிறது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஹெமெட்டியை ஆதரிக்கிறது.
இரண்டு ஜெனரல்களும் அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வலுவூட்டல்களைப் பெற முயன்றதாக ஹட்சன் கூறுகிறார்.
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவும் சூடானில் உள்ளது. ஆனால் அதன் ஈடுபாடு முக்கியமாக நாட்டின் தங்க இருப்புக்களை சுரண்டுவதில் கவனம் செலுத்துகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
