மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க அதிபர்களுக்கு அனுமதியில்லை
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவ மாணவியரை அழைப்பதற்கு அதிபர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு, தெற்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களில் தவணைப் பரீட்சை நிறைவடைந்துள்ள காரணத்தினால் தரம் 6 முதல் 13 வரையிலான மாணவ மாணவியரைப் பாடசாலைக்கு அழைப்பதற்கு அனுமதியில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு காரணமாகப் பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை வழங்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, கல்வி அமைச்சிடம் கோரியுள்ளது.
இதேவேளை, மேல், மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் பரீட்சை நடைபெறும் மாணவ மாணவியர் மட்டுமே பாடசாலைகளுக்கு அழைக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்து ஏனைய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! Manithan
