உணவு விஷமாகியதால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
புத்தல- பல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் உணவு விஷமாகியதால் 17 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின் மாணவர்கள் சுகயீனமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான தரத்தில் உணவு இல்லாமை

இலங்கை மக்கள் உட்கொள்ளும் உணவு முறையான தரத்தில் இல்லாமையினால் அதிகளவானோர் தொற்றாத நோய்களுக்கு உள்ளாவதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
உணவுக்கு உரிய தர நிர்ணயம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam