சி.ஐ.டி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவன்!
கொழும்பிலுள்ள சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு 17 வயதான பாடசலை மாணவன் ஒருவர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
முகப்புத்தகத்தில் அவரால் இடப்பட்டதாக கூறப்படும் பதிவொன்று தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருணாகலை, வாரியபொல - கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 17 வயதான மணவன் ஒருவரே இவ்வாறு எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட பதிவொன்று தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.