சர்வதேச ரீதியில் சாதனை படைத்த கந்தளாய் மாணவி
பெங்களூர் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், கந்தளாய் பேராறு தி/பரமேஸ்வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவி செல்வி சாந்தரூபன் கீஷனா சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இரட்டை வாள் சுருள்
கடுமையான மற்றும் போட்டித்தன்மை மிக்க சுற்றுப்போட்டிகளில் தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் கலந்து கொண்ட கீஷனா, மூன்று பிரிவுகளில் பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் தனது திறனை நிரூபித்துள்ளார்.

குறிப்பாக, இரட்டை வாள் சுருள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதுடன், மொத்தமாக இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி கந்தளாய் மண்ணிற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri