சீனாவில் ஒரேவாரத்தில் நடத்தப்பட்ட மற்றுமொரு படுகொலை சம்பவம்: 8பேர் பலி
சீனாவில் ஒரு வாரக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த மற்றுமொரு படுகொலை சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தொழில்பயிற்சி கல்லூரி ஒன்றில் பயின்ற பழைய மாணவர் ஒருவர், நேற்று, கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த பழைய மாணவர், கத்தியை பயன்படுத்தியே இந்த கொலைகளை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டமளிப்பு நிகழ்வு
சம்பவத்தின் போது அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பழைய மாணவரை கைது செய்துள்ளனர்.
பரீட்சை சித்தியெய்தமையால், பட்டமளிப்பு நிகழ்வுக்கு தாம் அழைக்கப்படவில்லை என்ற ஆத்திரமே, 21வயதான குறித்த மாணவரின் இந்த செயலுக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த திங்கட்கிழமையன்று, விவகாரத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தியில்லை என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த 62 வயதான ஒருவர், காலை நேர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை செலுத்திய சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டு, 45 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
