சீனாவில் ஒரேவாரத்தில் நடத்தப்பட்ட மற்றுமொரு படுகொலை சம்பவம்: 8பேர் பலி
சீனாவில் ஒரு வாரக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த மற்றுமொரு படுகொலை சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தொழில்பயிற்சி கல்லூரி ஒன்றில் பயின்ற பழைய மாணவர் ஒருவர், நேற்று, கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த பழைய மாணவர், கத்தியை பயன்படுத்தியே இந்த கொலைகளை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டமளிப்பு நிகழ்வு
சம்பவத்தின் போது அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பழைய மாணவரை கைது செய்துள்ளனர்.
பரீட்சை சித்தியெய்தமையால், பட்டமளிப்பு நிகழ்வுக்கு தாம் அழைக்கப்படவில்லை என்ற ஆத்திரமே, 21வயதான குறித்த மாணவரின் இந்த செயலுக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த திங்கட்கிழமையன்று, விவகாரத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தியில்லை என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த 62 வயதான ஒருவர், காலை நேர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை செலுத்திய சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டு, 45 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan
